Disable text selection

May 23, 2012

அன்னையினருள்


ஸ்ரீ காமாக்ஷி துணை:


மயங்கிய நிலை:

தீதிது செய்ய நலமிதென் றறியோம்

மோதிடு மதங்கொள் கரிபோல் மதியோம்;

சோதியன் செவ்வடி சிந்தனை செய்யோம்

செய்யா தன செய்வோம்;

உய்யும் வழிசெயல் செய்யோம் மெய்யின்

பொய்யா ரனுபவம் மெய்யாய்க் கொண்டே

செய்யா தனபல செய்துழி வீழ்வோம்

மெய்யா னதுகா ணோம்.

அண்டங் கொண்டது பிண்டங் கொள்ளும்

கண்டங் கருத்தவன் கார்முகில் வண்ணன்

உண்டான் உலகம் உலகே ழானான்

உண்மை யதை யுணரோம்;

உய்த நிலை:

போற்றியெனப் பணிந்துவிட் டோமெம் மம்மை

பொன்னடிக்குப்பல் லாயிரம் போற்றி காண்;

தாயெனக் கொண்டுவிட் டோம் - பெற்ற

சேய்பண்ணும் சேட்டைகள் தாய்பொறுப் பாள்!

உய்வித் தெமைக் காப்பாள்கா ணன்னை

கொய்மலர் வண்டார் குழலிகா மாக்ஷி;

வேறென்ற நிலை களைவா ளொருமாயத்

திரை கிழித்தேகிடக் கரந் தருவாள் .

No comments: