Disable text selection

June 1, 2012

கண்ணன்-காதலன்-சத்குரு.....

காணுமி டந்தோ றும்மெங் கண்ணன்

கட்டழ காச்சு தடி யோர்மாயன்

வேணுகு ழாயூ தும்விண் வண்ணன்

நட்டவி தைகா தல்மர மாச்சுது ;

துயிலது பயிலா தேவெயி லோனொளி

செயலது மிலதா யேமல மிலதாய்

வயலது நிலவுல கம்மற மேபயிர்

செயவிசை மயிலிற கோன்.

நோக்குமி டந்தொறும் நீக்கமி லாதுயாம்

தாக்கும் பெரும்பகை யாவும றைந்தன

தேக்கும றைபொரு ளாக்குமு றைபொரு

ளேக்கந்த விர்த்தெனை நோக்கிய நாள்முதல்;

No comments: