Disable text selection

May 24, 2012

அன்புக்கு-பேதமுண்டோ?

குன்றின்மீ தகலேற்றி வைத்தா லங்கு
சென்றிடும் யாவர்க்கு மொளிகாட்டு மன்றோ;
அன்பெனும் குன்றேறி நின்றுவிட் டாரவர்
கண்களில் பண்புசெய் பேதங்க ளுண்டோ?

உரை:

உயர்ந்து பலரும் காணுமாறு விளங்கும் பெருமை பொருந்திய குன்றின் முகட்டில் அன்பு பொருந்திய அறிஞர் ஒரு பெரும் அகல் விளக்கினை ஏற்றுவாராயின், ஒளி பொருந்திய அழகிய அவ்விளக்கு, காண்போருக்கு அச்சத்தை விளைவிக்கும் இயல்பினை உடைய அந்த காட்டு வழியே செல்லும் மாந்தர்க்கு ஒளியினை நல்கும்.

இவன் நல்லவன், இவன் பொல்லான் என்று வேறுபாடு பார்த்தா அவ்விளக்கு சிறந்த ஒளியினை வழங்கும்? யாவர்க்கும் அன்றோ?

அங்ஙனம், தம் நெஞ்சகத்தே அன்பெனும் அமுதத்தை கொண்ட பண்புடைய கற்றவர், அவ்வன்பினை பேதம் பார்க்காது அனைவர்க்கும் அளித்து தாமும் இனிது மகிழ்ந்திருப்பர்.

No comments: