Disable text selection

July 4, 2012

எதிர்பார்ப்பென்ன?

சென்ற பதிவின் தொடர்ச்சியாக வருவது தான் இந்த பதிவு.

இந்த கேள்வியை முன் காலத்தில் பெண் வீட்டார் பையன் வீட்டாரிடம் கேட்பார்கள். இன்று நிலைமை தலைகீழாகி இருக்கிறது போலயே!

matrimonial தளங்களுக்கு போய் பார்த்தால் looking at the long list of sometimes surreal expectations, தலை சுற்றுகிறது, to say the least.

எனது வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என ஒவ்வொரு மனிதனும் மனுஷியும் நினைப்பது இயல்பு தான்.

வருகிற வாழ்க்கை துணை எவ்விதம் அமைய வேண்டும் என கனவுகளும் எதிர்பார்ப்புகளும் இருப்பது இந்த வயதில் வெகு இயல்பு தான்.

ஆனால். காதல் என்பதும் அன்பு என்பதும் இதை எல்லாம் தாண்டிய ஒன்று.

commitment எனும் சொல்லை நாம் அளவுக்கு மீறி glorify பண்ணிவிட்டோம்.

ஆரம்ப காலத்தில் அது சுகமாக இருக்கும், அன்புடன் காதலுடன் சேர்ந்து சரியான அணுகுமுறையில் தான் இருக்கும். ஆனால் அதை மட்டுமே பிடித்து கொண்டு விட்டால் தான் பிரச்சினை.

அன்பும் காதலும் இருந்தால் commitment இயல்பாகவே இருக்கும். அதை தனியாக emphasize பண்ணவேண்டிய தேவை இல்லை.

நாட்பட அன்பும் காதலும் தேய தொடங்கும் போது, அதே commitment உயிரற்ற எலும்புக்கூடாகி, கட்டாயமான ஒரு ritual ஆகி விடுகிறது.

commitment வேண்டாம் என்று நான் சொல்லவே இல்லை. (அதை தான் living together பிரசாரகர்கள் சொல்லுகிறார்கள். நான் அவன் இல்லை)

கொஞ்சம் உன்னிப்பாக பார்த்தால் இவர்கள் வேண்டாம் என்பது, அன்பற்ற சூழ்நிலையிலும் கட்டாயம் அந்த உறவில் இருக்க வேண்டும் என்ற நிலைமை வேண்டாம் என்பது தான்.

ஆனால் இவர்கள் பண்ணும் தப்பு, அந்த கமிட்மென்ட்டை பாரமாக்கியது எதுவோ அதை சரி பண்ண முயலாமல் கமிட்மெண்டே வேண்டாம் என்பது தான்.

ஆரம்பத்தில் இருந்த அன்பு later on ஏன் இல்லாமல் போனது என ஆராய்வது இல்லை.

கரையான் புற்று வைத்தால் உடைத்து போடுகிறோம். ஒரு வாரம் கழித்து வந்து பார்த்தால் அதே இடத்தில் மீண்டும் புற்று வைத்து இருக்கிறது. புற்றை உடைத்தால் போதாது. ராணி பூச்சியை தேடி சம்ஹாரம் பண்ணினால் தான் புற்று நீங்கும்.

இங்கே பிரச்சினையின் மூலம் தான் ராணி பூச்சி.

அது என்ன? எதிர்பார்ப்புகளுடன் கூடிய அன்பு. நீ இதை செய், நீ இப்படி இருந்தால் தான் உன்னை எனக்கு பிடிக்கும், நீ இதை இதை எல்லாம் செய்து கொடுத்தால் தான் எனக்கு உன்னை பிடிக்கும், அப்போது தான் உன் மீது எனக்கு அன்பு வரும், அன்பு வந்தால் உனக்கு பிடித்ததை நான் பண்ணுவேன் என்று ஆகி விட்ட நிலை.

அந்த எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகாத போது கோபம், விரக்தி. அதை துணையிடம் காட்டுவது. அதன் எதிர்வினை நிச்சயம் அன்பாக இருக்காது. இது ஒரு முடிவில்லா கொடுவட்டம் - A vicious cycle. 

கவிதைக்காக சொல்லவில்லை. எதிர்பார்ப்பு இல்லாமல், துணையை/அடுத்தவரை நேசிப்பது தான் அன்பு. அது உன்னதமான காதல் என்று சொல்ல மாட்டேன். அது தான் காதலே. உன்னதமான காதல் என்றால் சாதாரணமான காதல் என்று வேறு உள்ளதோ? காதலின் லக்ஷனமே அடுத்தவரை அப்படியே ஏற்று கொள்வது தான்.

That kind of true love never diminishes. It, like old wine, only gets better with age, reaching a stage where it transcends the mundane physical aspects. Slowly the body and form and name lose their significance, and hearts commune. And that's only possible with acceptance and unconditional giving of love. Then the relationship would be an expression of joy, not means of joy!

இந்த மனம் உடையவர்களைப்பார்த்தீர்கள் என்றால் - உன்னிப்பாக பார்த்தீர்கள் என்றால், அவர்கள் (வரப்போகும்) துணை மீது மட்டும் அல்ல எல்லார் மீதும் கட்டுப்பாடுகள் இல்லாத அன்பும் பாசமும் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களின் அன்பு அவர்களின் சுயமாக வெளிப்படும்.

மனித சமூகம் மீதும், இயற்கையின் மீதும் பொங்கிய அன்பினை வெளிப்படுத்தும், ஏற்றுக்கொள்ளும் இவர்கள் desparate ஆக ஒரு துணையை வேண்டி, தேடி போவதில்லை. துணை அப்படி இருக்க வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என scrutinize பண்ணி விளம்பரம் பண்ணுவதில்லை. உன்னதமான இவர்களுக்கு தகுந்த நல்ல துணை தேடாமலேயே இவர்கள் கையை பிடிக்கிறது. ஆண்டவனின் பரிசு போல, தேடாமலேயே தெய்வீகமான இவர்களுக்கு ஏற்ற துணைவரோ துணைவியோ இவர்கள் மடியில் விழுவார்கள்.

No comments: