Disable text selection

July 4, 2012

மட்டமா?

சமீபமாக ஒரு திருமண/வரன் தேடும் தளத்துக்கு சென்று பார்த்த பொழுது மனதில் எழுந்த எண்ணங்களின் பிரதிபலிப்பே இந்த குறும்பதிவு.

பையன் நக்ஷத்திரத்துக்கு ஏற்ற பெண் பிள்ளை கிடைப்பதே தேடோ தேடென்று தேடிய பின்பு தான் ஒன்றோ இரண்டோ கிடைக்கிறது. அதன் பின் தான் ஜாதகம் பொருத்தி, அதுவும் பொருந்தினால் தான் Alliance பேச்சே நடக்கும், முக்கால்வாசி குடும்பங்களில்.

அந்த பெண்களின் profile இல் பார்த்தால், Prospective groom பொறியியல் படித்தவராக இருக்க வேண்டும், மாதம் இவ்வளவு (5 லக்ஷத்துக்கு மேல்) சம்பாதிக்க வேண்டும், வயதும் இருபத்தி எட்டுக்கு உள் தான் இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டு இருக்கும்.

அப்போ அறிவியல் படித்தவன், இலக்கியம் படித்தவன் எல்லாம் மட்டமா? எல்லாருக்கும் பொறியாளரோ மருத்துவரோ தான் வேண்டும் என்றால் மற்றவர்கள் என்ன பண்ணுவது?

கொஞ்சம் சராசரியாக சம்பாதித்தால் என்ன குறைச்சல்? முப்பது வயதுக்கு முன்பே வருஷம் ஐந்தாறு லக்ஷம் சம்பாதிப்பவர்கள் உள்ளார்கள் தான், ஆனால் குறைவு. சராசரியாக இரண்டில் இருந்து நான்கு லக்ஷம் ரூபாய் தான் பெறுவார்கள் முக்கால்வாசி பையன்கள்.

திறமைக்கும் குணத்துக்கும் குடும்ப பின்னணிக்கும் மதிப்பு கொடுத்து கலியாணம் பண்ணி வாழ்ந்து வளர்ந்து உயர்ந்த காலம் மலையேறி போய் விட்டதோ என பயமாக உள்ளது.

நல்ல குணமும் ஒழுக்கமும் உள்ள ஆண்மகன் நிச்சயம் நல்ல ஊதியம் வரும் நாட்களில் பெறுவான். அதை fast food கலாசாரம் போலவே எல்லாம் இப்பவே வேண்டும் என எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

அதே போல அறிவியல் மற்றும் இலக்கிய துறை சார்ந்தவர்கள் என்றால் என்ன மட்டமா? அவர்களில் மனைவியை வைத்து காப்பாற்ற (???) கூடிய ஆண்மக்கள் இல்லை என எதை வைத்து முடிவு கட்டுகிறார்கள்?

முதலில், கலியாணத்துக்கும் தாம்பத்தியத்துக்கும் படித்த படிப்புக்கும் என்ன சம்பந்தம்? வாழ பொருள் ஈட்ட தொழில் தேவை, அதற்கு படிப்பு தேவை. அவ்வளவு தானே. நேர்மையாக உழைக்க என்ன துறை ஆனால் என்ன? இப்போதெல்லாம் அறிவியல் மற்றும் கலை துறையினரும் ஓரளவுக்கு நன்றாகவே சம்பாதிக்கின்றனர். முன் போல இல்லை.

பெண்களே, குணத்தை பாருங்கள். குடும்ப பிண்ணணியை பாருங்கள். நேர்மையான உழைப்பை பாருங்கள்.

(ஆண்களுக்கும் இது பொருந்தும்)

இது திட்டல்ல. மன வேதனை, ஆற்றாமையின் வெளிப்பாடு.

 

 

 

 

 

 

 

 

 

 

No comments: