Disable text selection

October 1, 2012

காந்தி ஜெயந்தி! (கவிஞர் தனுசு)

காதி கட்டிய கிழவன்
இந்த
பெருங்கிழவன்!
இவன்
மோதி முட்ட பணிந்தான்
பரந்து கிடந்த பரங்கியன்!.

மூத்திர  சகதியில்
இருந்த இந்த மூத்த இனத்தை
சூத்திரம் செய்து
பத்திரம் செய்தவன்!

இந்த
ஊருக்கு உழைத்தவனை
உலகுக்கு சேர்த்தது
அவனது உண்மை!


அகிம்சை என்பதே
அவனின் எண்ணம்
அதை போதித்தான்
உலகம் புரியும் வண்ணம்!

உடைந்து கிடந்த இந்தியா
இடிந்து போன இந்தியர்
இகழ்ந்து பார்த்த உலகம்
இவனால்
திரும்பி பார்த்த அதிசயம்!

தடி ஊன்றிய தாத்தா
எங்களின்
தேசப்பிதா...
நீ ஜனனம் கண்ட இந்நாளில்
உன் மந்திரம் ஜபித்து மகிழ்கிறேம்
ஜெய்ஹிந்த்!
-தனுசு-

No comments: