Disable text selection

October 2, 2012

Charity begins @ home :)

வீட்டில் உள்ளவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுக்காமல், அவர்களுடைய நியாயமான அபிலாஷைகளை, எதிர்பார்ப்புகளைக்கூட நிறைவேற்றாமல், ஊருக்குள் என்ன நல்ல பெயர் எடுத்தும், எத்தனை பிரபலமாகியும், ஊருக்கு உபதேசம் பண்ணியும் தம்படி பிரயோஜனம் இல்லை. ஊருக்கு உண்மையாகவே சமூக சேவை செய்தால் கூட வீட்டில் உள்ள உற்றவர்களின் வயிற்றெரிச்சலுக்கும் அதிருப்திக்கும் ஆளானால், சேவையால் கிட்டும் நற்பலனை விட இவர்களுக்கு செய்யும் பாபமே அதிகமாக மிஞ்சும். தன்னை முன்னிலைப்படுத்தி வினையாற்றும் அற்பர்களுக்கு குடும்பம் ஏன்? அவர்களுக்கு குடும்பமும் ஒத்து வராது, துறவும் கிடைக்காது. அதை தான் ஆங்கித்தில் அழகாக நறுக்கு தெறித்ததுபோல Charity begins at home, என்று சொல்லி வைத்தான்!

No comments: