Disable text selection

February 11, 2013

காலகாலர் துதி ஐந்து.....

மேனி யழகும் முதன்மையெ னுந்நிலையும்
பேணிய நாளும் நிலையோ - தேமொழிநல்  
தோணிய வன்பதம் பிறவிக் கடல்தாண்ட
காலகா லன்பதம் சேர்.

தனமும் வாக்கும் கொண்டகு டும்பமும்
சினம்கொண்ட கூற்றின்முன் நில்லா - தேமொழிநல்
கணம்கொண்ட நாதனா மாலகாலம் லம்முண்ட 
காலகா லன்பதம் சேர்.

வீரமும் வெற்றிச் செருக்கும் பாரிலோர்
தீரமுடன் சேர் தம்பியும் - தேமொழிநல் 
பூரமது போல்கரையும் கண்டாய் வாழிநீ
காலகா லன்பதம் சேர்.

கற்ற கல்வியும் பெற்ற மனைசுகமும்
நற்றவம் போலவ ருமா   - தேமொழிநல்
உற்றதாயும் உடன்வாராள் பற்றறுத்து
காலகா லன்பதம் சேர்.

நுண்ணிய நல்லறிவும் திண்ணிய தோள்தவழும்
ஒண்ணுதல் பிள்ளைகளும் நிலையா - தேமொழிநல்
புண்ணியப் பயன்றுய்த் துய்ய கண்ணுதலோன்
காலகா லன்பதம் சேர்.

No comments: