Disable text selection

December 27, 2013

கண்கள் புரிந்துவிட்ட பாவம் ....

கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க் 
காதலி தென்பட வில்லை; இது 
பண்புடை யோர்செயல் தாமோ? கொலை 
பாதகம் பெண் செய லாமோ?

பண்கள் இசைத்துனைப் போற்றிப்- பல 

சீர்மைகள் செய்திடு வேன்காண்; சிறு 
கண்ணுள் மணியெனக் காவாய்க் கலி 
தீர்த்தெனைக் கண்டருள் பெண்ணே!

முன்னைப் பிறப்பில் செய்த பாவம் உனை 
இன்னமும் யான்பெற வில்லை - அழும் 
பிள்ளையைத் தாய்விட லாமோ நறும் 
தெள்ளமுதே விட மாமோ?

நல்ல பருவமுள போதே ஒரு 
இல்லத்த றம்வளர்த்தல் வேண்டும் - சுடு 
கோடையில் நல்லுயிர் நல்கும் குளிர் 
ஓடை நிலாவொளி யேவா !    

கண்ணில் தெரிவதில்லை தோற்றம் எனில் 
தாய்கரு வைமறப் பாளோ - என 
தாவியி லேவளர் தேவீ! உனைப் 
பேணும் வரம்தரு வாயோ?     

  

(புவனேஷ்வர்)

No comments: