Disable text selection

December 30, 2013

எது கவர்ந்தது?

"அன்பே"
"ம்ம்ம்???" 
"பிரிய சகீ..."
"என்ன விஷயம்?"
"என்னை உன் பிராணநாதனாக வரிக்க காரணம் யாது?"
"என்ன இப்போ முப்பது வருஷம் கழிச்சு இந்த கேள்வி?"
"இல்லை, என்னுடைய சந்திரன் போன்ற முகமா, சிம்மநாதம் போன்ற குரலா, கவித்திறனா, தமிழ்ப் புலமையா அல்லது எனது செல்வ வளமான்னு, என்னுடைய பலபட்ட சிறப்புகளில் எது உன் நெஞ்சைக் கவர்ந்ததுன்னு தெரிஞ்சுக்க கேக்கறேன்...."
"நல்லது. இப்போ நான் இந்த வெத்தக்கொழம்பை முடிக்கணும்."
"பரவாயில்லை. அது கிடக்கட்டும். சொல்லு"
"அந்த லிஸ்ட் கொஞ்சம் நீளமாக்கும்......."
"தெரியும் தெரியும். உன் பதியின் பிரதாபங்கள் நிறைய. உனக்கு அன்னைக்கே தெரிஞ்சது பற்றி இறும்பூது அடைகிறேன், கண்ணே"
"பொண் பாக்க வந்த போது, நான் பாடறத்தே உணர்ச்சி வசப்பட்டு நீரும் சேர்ந்து தாளம் போட்டு ஒத்தா பாட ஆரம்பிச்சேளே...."
"சரி. வெத்தக்கொழம்பை பாரு" 
  ---
புவனேஷ்வர்    

No comments: